மும்பை: சர்வதேச சந்தையின் ஸ்திரதன்மையின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்றைய வர்த்தகத்தில் சுமார் 283 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கியின் பாலிஸி ஆலோசனை கூட்டம் துவங்கிய முதல், ஆசிய சந்தைகள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களாகத் தொடர் உயர்வைச் சந்தித்து, வியாழக்கிழமை 27,000 புள்ளிகளை எட்டியுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சிப்லா, ஹிந்துதான் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 283.17 புள்ளிகள் உயர்ந்து 27,115 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதே நிலையில் நிஃப்டி குறியீடு 83.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,174.60 புள்ளிகளை எட்டியுள்ளது.