மும்பை: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் மந்த நிலை காரணமாக இந்திய சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் முதலீடு குவிந்தது. இதனால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஐரோப்பிய சந்தையில் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இன்று முக்கியக் கூட்டத்தில் இந்நாட்டிற்கு நிதியுதவி அளிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும் அமெரிக்கச் சந்தையில் பெடர்ல் வங்கி வட்டி வகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததால் அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் முதலீடு குறைந்து வருகிறது.
இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 414 புள்ளிகள் வரை உயர்ந்து 27,730.21 புள்ளிகளைச் சந்தை முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டியும் இன்று உயர்வுடனே முடிவடைந்தது, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு சுமார் 128.15 புள்ளிகள் வரை உயர்ந்து 8,353.30 புள்ளிகிளை அடைந்தது.