மும்பை: சர்வதேச சந்தையில் நிலவும் மாறுபட்ட நிலையின் காரணமாகக் காலை முதல் உயர்வில் இருந்த மும்பை பங்குச் சந்தை, வர்த்தக நாள் முடியும் தருவாயில் ஜூன் மாத்திற்கான திட்டங்கள் நாளை முடிவடைவதால் சென்செக்ஸ் 74 புள்ளிகள் வரை சரிவை தழுவியது.
இவ்வாரம் முழுவதும் வர்த்தகம் உயர்வான நிலையிலேயே உள்ள போது, புதன்கிழமை வர்த்தக முடியும் நேரத்தில் சரிந்ததால் முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக முடிவில் 74.70 புள்ளிகள் சரிந்து 27,729.67 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் வர்த்தக முடிவில் 20.70 புள்ளிகள் சரிந்து 8,360.85 புள்ளிகளை எட்டியது.
இன்றைய நாணயச் சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 0.05 பைசா சரிந்து 63.64 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.