மும்பை: கிரீஸ் மற்றும் சர்வதேச சந்தைகளின் மந்தநிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே 450 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, 600 புள்ளிகளை வரை சரிந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் மும்பை பங்குச் சந்தை சரிவிலேயே முடிவடைந்தது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு 166.69 புள்ளிகள் சரிந்து 27,645.15 புள்ளிகளை எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 62.70 புள்ளிகள் சரிந்து 8,318.40 புள்ளிகளை அடைந்தது சரிவு பாதையிலேயே உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஐடிசி, டாக்டர் ரெட்டி, என் அண்ட் டி, எச்டிஎப்சி. பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை மட்டுமே உயர்வடைந்தது, பிற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.