மும்பை: இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்குப் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை வடிவமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இக்காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு விவசாயி தனது நிலத்தில் செலவிடப்படும் தொகை மற்றும் விவசாயி வங்கிகளில் வாங்கிய கடன் ஆகிய அனைத்தும் அடங்கும் படி வடிவமைத்து வருகிறோம் என ஜேட்லி கூறினார்.
அருண் ஜேட்லி
மும்பையில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர், கூடிய விரைவில் இந்திய விவசாயிகளின் கவலை மற்றும் கடன் சுமையைத் தீர்க்கும் வகையில் புதிய இன்சூரன்ஸ் திட்டம் வெளியிடப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
கார்ப் (Crop) இன்சூரன்ஸ்
தற்போது புழக்கத்தில் உள்ள கார்ப் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன் தொகைக்கு மட்டுமே ஈடுசெய்யும் அளவில் உள்ளது.
வளர்ச்சி
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களில் விவசாயத் துறை வளர்ச்சியில் தொடர் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.
குறைந்தபட்சமாக 4 சதவீத வளர்ச்சியைக் கூட நிலையாக வைக்க முடியவில்லை என ஜேட்லி கூறினார்.
உற்பத்தி சரிவு..
இந்தியாவில் விவசாயப் பொருட்களின் உற்பத்தி கணிசமான அளவில் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தியாவில் 85 சதவீத விவசாயிகள் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்து வருகின்றனர். அதிலும் அதிகப்படியான செலவுகள், குறைவான உற்பத்தி, விவசாயிகளின் கடன் நிலுவை, இயல்பு நிலைக்குப் பொருந்தாத காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மாறுபட்ட பருவமழை காலம் ஆகியவை இச்சந்தையின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கிறது.
மழை பெய்தும்.. பொய்த்தது..
இந்தியாவில் பருவ மழை காலத்தில் மழை அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஜூன் மாதம் 25 சதவீத அதிக மழையும், ஜூலை மாதம் 50 சதவீத குறைவாக மழை பெய்யும் நிலை உள்ளது.
ஆர்பிஐ
ரிசர்வ் வங்கித் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான் மத்திய அரசின் விவசாயிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்ட ஆலோசனை குறித்து உறுதி அளித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications