பெங்களூரு: 146 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறையில், முன்னணி நிறுவனங்களாகத் திகழும் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேறி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய ஐடி நிறுவனங்களில் எப்போதும் இல்லாத அளவிற்குப் பணியாளர்கள் வெளியேற்ற எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஐடித்துறையில் திடீரென வேலையை விட்டு நீக்குவது இயல்பு.. இத்தகையை நிலையில் உங்களின் நிதிநிலையை சமாளிப்பது எப்படி?
1 லட்சம் பணியாளர்கள்
கடந்த 4 காலாண்டுகளில் அதாவது ஒரு வருடத்தில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்களில் இருந்து சுமார் 1,00,000 ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக முக்கிய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
வெளியேற்ற விகிதம்
இந்திய ஐடி நிறுவனங்களில் 19-20 சதவீத வெளியேற்ற விகிதம் மிகவும் சாதாரணமான ஒன்றாக உள்ளது. கடந்த 5 வருடங்களில் இதன் விகிதம் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
(ஜூக்கர்பெர்க் போல ஆக வேண்டுமா?? 9வது ஸ்லைடரை பாருங்க. சூப்பர் ஐடியா இருக்கு)
புதிய பணியாளர்கள்
இக்காலகட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களில் 150,000 பணியாளர்கள் இணைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
நாஸ்காம் தகவல்
மார்ச் 2015ஆம் ஆண்டின் படி இந்திய ஐடித்துறையில் 1 பில்லியன் டாலர் வருவாய் பெற வேண்டும் என்றால் 14,350 பெறியாளர்களை நிறுவனம் பணியில் அமர்த்த வேண்டும்.
2003ஆம் ஆண்டு இதன் அளவு 38000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த நிலை
இத்துறையில் ஆட்டோமேஷன் மற்றும் புதிய தொழில்நுட்ப வருகையால் பணியாளர்களின் நிலைப்பாடு நிறுவனத்தில் குறைவாக உள்ளது.
எதிர்காலத்தில்
இந்தியாவைப் பொருத்த வரை.. அடுத்தச் சில வருடங்களில் ஐடி மோகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்களுக்குப் புதிய பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இத்தகைய நிலையில் பணியாளர்களின் சம்பளம் அதிகளவில் உயர வாய்ப்புண்டு. ஐடித்துறை மந்தமடையும் என்றால் வேறு எந்தத் துறை முன்னேறும்.
உற்பத்தி
தற்போதைய நிலையில் மத்திய அரசின் திட்டங்கள், அன்னிய முதலீடுகள் மற்றும் வாய்ப்புகளைப் பார்க்கும்போது இந்தியாவில் உற்பத்தி அளவு மற்றும் ஏற்றுமதி கடுமையாக உயரும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்துள்ளது.
வரும் முன் காப்போம்!
சொன்னா கேளுங்க
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..