சென்னை: 2015-16ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்துத் துறை சார்ந்த வரியில்லா முதலீட்டுப் பத்திரங்கள் வெளியீட்டுக்கான அறிவிப்பை அறிவித்தார். அன்று முதலே முதலீட்டாளர்கள் பத்திர வெளியீட்டுக்காகக் காத்துக்கிடக்கின்றனர்.
சரி இத்தகைய முதலீட்டுப் பத்திரத்தில் என்ன சிறப்பு?
இப்பத்திரங்களின் மீதான முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு அரசு வரி விதிக்கப்படுவதில்லை. இதனால் இந்த முதலீடு திட்டம் மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.
மேலும் இதில் கிடைக்கும் வருமானத்தை, வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட வேண்டும், ஆனாலும் இதனை வரியில்லா வருமானப் பிரிவில் இத்தொகைக்கு வரி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் 2015-16ஆம் நிதியாண்டின் வெளியாக இருக்கும் முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் அதன் மதிப்பையும் இங்குப் பார்ப்போம்
வரிசை எண் | நிறுவனத்தின் பெயர் | வெளியிடப்படும் பத்திர மதிப்பு |
1. | நேஷ்னல் ஹைய்வேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (NHAI) | ரூ.24000 கோடி |
2. | இந்தியன் ரயில்வேஸ் பைனான்ஸ் கார்பரேஷன்(IRFC) | ரூ.6000 கோடி |
3. | ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மண்ட் கார்பரேஷன் (HUDCO) | ரூ.5000 கோடி |
4. | Indian Renewable Energy Development Agency (IREDA) | ரூ.2000 கோடி |
5. | பவர் பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (PFC) | ரூ.1000 கோடி |
6. | Rural Electrification Corporation Limited (REC) | ரூ.1000 கோடி |
7. | என்டிபிசி லிமிடெட் | ரூ.1000 கோடி |
இத்தகைய பத்திரங்களுக்கும் முதிர்வு காலம் 10 வருடம் முதல் 20 வருடம் வரை இருக்கும். இப்பத்திரத்தை வாங்குவது எப்படி?