சென்னை: இந்தியாவில் வருமான வரி செலுத்தும் பலர், தங்களது முதலீட்டுக்கான லாபத்தில் வரி விலக்கு பெறவரியில்லா கடன் பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் பலருக்கு இதை எங்கு எவ்வாறு வாங்குவது என்பதைக் குறித்த அனுபவம் இருப்பதில்லை.
சில வருடங்களுக்கு முன் வரிச் சேமிப்பு கடன் பத்திரங்களை வழங்கிய பல நிறுவனங்கள் இருந்தன. உதரணமாக இந்தியரயில்வே நிதி நிறுவனக் கடன் பத்திரங்கள், ஹட்கோ நிறுவன கடன் பத்திரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப்பத்திரங்கள் இன்னும் பல..
இந்த வரிச் சேமிப்புப் பத்திரங்களின் செயல்படு, நன்மைகள், லாப அளவு பற்றி இங்குப் பார்க்கலாம்...
வரிப் பயன்
நீங்கள் ஒரு வரிச் சேமிப்புப் பத்திரத்தை வாங்கும்போது அதில் இருந்து கிடைக்கும் வட்டிக்கு வரிச் செலுத்துவதில் இருந்துவிளக்கு உண்டு. இதன் மூலம் வருமான வரியைக் கணக்கிடும்போது இந்த வட்டித் தொகையை மொத்த வருமானத்தில்சேர்க்க வேண்டியதில்லை.
உதாரணம்
நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட்டை தொடங்கி அதன் மூலம் பத்தாயிரம் ரூபாய் வட்டி வருமானால் அதனை மொத்தவருமானத்தில் கணக்கில் கொள்ளவேண்டும்.
ஆனால் வரிச் சேமிப்புப் பத்திரங்கள் வாங்கினால் அதனைக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
எனவே இதன் மீது நீங்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.
எங்கு வாங்கலாம்?
இவற்றை நீங்கள் பங்குகளை வாங்க பயன்படுத்தும் அதே வணிகக் கணக்கின் மூலம் வாங்கலாம். உங்கள் முகவரைஅழைத்து இதற்கான ஆணையைக் கொடுக்கலாம் அல்லது நீங்களே கூட ஆன்லைனில் கணக்கு வைத்திருந்தால் அதன்மூலம் வாங்கலாம்.
கவனிக்க வேண்டியவை
இது போன்ற பத்திரங்களை வாங்கும் போது அவற்றின் விலை, வட்டி விகிதம், கணக்கு முடிவு நாள் ஆகிய விவரங்களைச்சரிபார்த்து வாங்குவது நல்லது.
ஆய்வு
மேலும் www.nseindia.com என்ற இணையத் தளத்தில் சென்று நீங்கள் வாங்க விரும்பும் பத்திரத்தை குறித்த தகவல்களைப்படித்து அறியலாம்.
அதற்கான தொடர்பை க்ளிக் செய்த பின்னர் மேற்கூறப்பட்ட உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும்கிடைக்கும்.
வட்டி விகிதம்
இதில் மிகவும் முக்கியம் அதன் விலையும் வட்டி விகிதமும். உதாரணமாக 8.1 சதவிகித வட்டியுடன் 1,000 ரூபாய்மதிப்புடைய ஒரு பத்திரத்தை 1100 ருபாய் கொடுத்து நீங்கள் வாங்கும் போது உங்களின் வட்டி வருவாய் குறைந்து போகவேவாய்ப்புள்ளது.
உங்களுக்கு 8.1 சதவிகித வட்டி கிடைக்கலாம் என்றாலும், நீங்கள் முதலில் வாங்கியவரைப் போல் அல்லாமல் 1,000ரூபாய்க்கு பதிலாக 1100 ருபாய் செலுத்த வேண்டியுள்ளதால் உங்களுடைய மொத்த வருவாய் அதிகளவில் குறையும்.
மதிப்பீடு
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் AAA மதிப்பீட்டினை பெற்றவை பெரும்பாலும் அரசு நிறுவனபத்திரங்களாகும்.
முதிர்வு காலம்
இத்தகைய பத்திரங்களின் முதிர்வு காலம் பொதுவாக வெளியிட்ட நாட்களிலிருந்து 10, 15 அல்லது 20 வருடங்களாகஇருக்கும்.
முடிவுரை
எனவே அடுத்த முறை நீங்கள் பத்திரம் வாங்கும் போது அனைத்து விவரங்களையும் நன்கு ஆராய்ந்து முக்கியமாக விலைமற்றும் வட்டி விகித விவரங்களைத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுங்கள்.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications