சென்னை: உலகின் பணக்கார கடவுகளில் ஒன்றான திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளகோவில்களில் காணிக்கையாகவும், தேவைக்கும் அதிகமாக இருக்கும் தங்க நகைகளையும் வங்கியில் வைப்பு வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் அளவு ஒரு டன் தங்கத்திற்கும் அதிமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் தேவைக்கு அதிகமாக தங்க நகைகள் உள்ளதால், அதனை உருக்கி ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்ப சிவா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலின் உண்டியலில் காணிக்கையாக அளிக்கப்படும் பங்குகள் மற்றும் பத்திரங்களை முறைப்படுத்த தேவஸ்தானம் கடவுளின் பெயரில் தயாக டீமேட் கணக்கை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..