மும்பை: சீன அரசு தனது நாணய மதிப்பை 2% குறைத்ததாலும், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவையின் காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சுமார் 350 புள்ளிகள் வரை சரிந்து சந்தையை பதம் பார்த்தது.
புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சீன சந்தையின் தாக்கத்தால், சென்செக்ஸ் குறியீடு சரிய துவங்கியது. இதன் பின் மதிய வேளையில் ஜஎஸ்டி சட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளின் காரணமாக மும்பை பங்குச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 353.83 புள்ளிகள் சரிந்து 27,512.26 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 108.55 புள்ளிகள் குறைந்து 8,353.80 புள்ளிகளை அடைந்தது.
மேலும் சன் டிவி மீதான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சூடுப்பிடித்துள்ளதால் இந்நிறுவன பங்குகள் இன்று 4.34 சதவீதம் சரிவை சந்தித்தது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..