மும்பை: சீனா மற்றும் ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,100 புள்ளிகள் வரை குறைந்து அதிகளவிலான முதலீட்டை இழந்து வருகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1624.51 புள்ளிகள் வரை சரிந்து 25,741.56 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் இந்திய சந்தையின் டாப் நிறுவனங்களாகக் கருதப்படும் ஐசிஐசிஐ, இன்போசிஸ் உட்படப் பல முக்கிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத் துவக்கத்திலேயே சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, 1 மணியளவில் 1028.02 புள்ளிகள் சரிவுடன் 26,324.61 புள்ளிகளை எட்டியது.
இதனால் ஐசிஐசிஐ வங்கி (5.34% சரிவு), இன்போசிஸ் (2.57% சரிவு), ஹெச்டிஎஃப்சி (4.18% சரிவு), எல்அண்ட்டி (4.22% சரிவு), மற்றும் ஆக்சிஸ் வங்கி(6.21% சரிவு), ஓஎன்ஜிசி (7.07% சரிவு), கெயில் (7.07% சரிவு) போன்றவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
பார்மா, ஐடி, வங்கி
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பார்மா, ஐடி, ஆட்டோமொபைல், வங்கி, கேப்பிடல் கூட்ஸ், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயும் துறைகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
முதலீடு
இத்தகைய நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ள நாணயச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் கணிசமான தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற இதைக் கிளீக் செய்யவும்.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..