இந்திய பங்குச்சந்தைக்கு இனி சுக்கிரன் திசை தான்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த முடிவுகளை எதிர்பார்த்துக் கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தை தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடந்து முடிந்த கூட்டத்தில் வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை பெடரல் வங்கி ஒத்திவைத்தது.

இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்திலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்து 207.41 புள்ளிகள் உயர்வில் சந்தை முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

பெடரல் வங்கியின் அறிவிப்புகளின் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச் சந்தை மற்றும் நாணயச் சந்தை உயர்வுடனே துவங்கியது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 202.29 புள்ளிகள் வரை உயர்ந்து 26,166.26 புள்ளிகளை எட்டியது. இதனால் வங்கிப் பங்குகள், ரிலையன்ஸ், சன் பார்மா போன்ற முக்கிய நிறுவனங்கள் இன்று அதிகளவில் உயர்ந்தது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கி 82.75 புள்ளிகள் உயர்வில் 7,981.90 புள்ளிகள் வரை உயர்ந்தது.

சுக்கிரன் பார்வை..

சுக்கிரன் பார்வை..

பெடரல் வங்கியின் இந்த முடிவால் இந்திய பங்குச்சந்தையில் இனி வரும் நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex jumps over 500 points on US Fed decision

The BSE Sensex continued its rally by jumping over 500 points on Friday after the US Federal Reserve on Thursday decided to keep the interest rates unchanged.
Story first published: Friday, September 18, 2015, 16:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X