ஓரே நாளில் கிராமிற்கு 32 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்ததன் மூலம் சர்வதேச நாணய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஓரே நாளில் கிராமிற்கு 32 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை!

இதன் காரணமாகக் கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலை தொடர் உயர்வு பாதையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் நிலை கிராமிற்கு 32 ரூபாய் வரை உயர்ந்து 1 மாத விலை சரிவை ஈடு செய்தது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 32 ரூபாய் உயர்ந்து 2,708 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 31 ரூபாய் வரை உயர்ந்து 2,532 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று ஏறுமுகத்திலேயே இருந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 310 ரூபாய் உயர்ந்து 35,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold tops Rs 27,000, surges Rs 400 to hit 1-month high

Continuing its rising streak for the third straight day, gold on Friday reclaimed Rs 27,000-mark by zooming at the bullion market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X