மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் நிலையான வர்த்தகத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை, வர்த்தம் முடியும் நேரத்தில் ஐரோப்பிய மற்றும் ஆமெரிக்க முதலீட்டாளர்களின் அதிகளவிலான பங்கு விற்பனையின் மூலம் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 247 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
நாட்டின் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி நாளை (செவ்வாக்கிழமை) நடக்க உள்ள கூட்டத்தில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகளாவது குறைக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்று இந்திய சந்தையில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 246.66 புள்ளிகள் சரிந்து 25,616.84 புள்ளிகள் வரை சரிந்து 25,616.84 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிப்டி குறியீடும் 72.82 புள்ளிகள் வரை சரிந்து 7,795.70 புள்ளிகளை அடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏர்டெல் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 52 வாரச் சரிவை சந்தித்து, சந்தையின் முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.