சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: எப் அண்ட் ஓ சந்தையில் அக்டோபர் மாதத்திற்கான ஆர்டர்கள் இன்று முடிவடைந்ததால், மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு வெளியேறியது. இதனால் மும்பை பங்குச் சந்தை இன்று தொடர் நான்காவது நாளாகச் சரிவை தழுவியது.

அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதால், அமெரிக்காவில் இருந்து இன்று குறைவான முதலீட்டை மட்டுமே பெற்றது.

சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் சரிவு..!

இதன் காரணங்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 201.62 புள்ளிகள் குறைந்து 26,838.14 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 59.45 புள்ளிகள் குறைந்து 8,111.75 புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 50 நிறுவனங்களில் டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ், லூப்பின், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோமோட்டோகார்ப், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் குறைந்த அளவிலான லாபத்தை மட்டுமே சந்தித்த நிலையில் பிற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex falls for fourth day, ends 201 points down

The BSE Sensex and NSE Nifty fell for a fourth consecutive day as market participants continued to square-up positions as Thursday was the last trading session of the October derivatives expiry.
Story first published: Thursday, October 29, 2015, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X