சென்னை: தங்கம் மீதான மோகம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு இங்கு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. நம் நாட்டுப் பெண்கள் எவ்வளவு மார்டனாக மாறினாலும் தங்கத்தின் மீதான காதல் மட்டும் குறையவில்லை.
2015ஆம் நிதியாண்டில், ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை 13 சதவீதம் அதிகரித்துள்ளது WGC தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் தங்கத்தின் தேவை 268 டன்னாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தங்க இறக்குமதியில் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும், இந்தியாவில் தங்கத்தின் தேவைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தங்கத்தின் விலை குறைந்ததே நுகர்வு அதிகரிப்புக்குக் காரணம் என்று வோல்டு கோல்டு கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியாவின் தங்க தேவையின் அளவு 238 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் தங்க தேவை இந்தக் காலாண்டில் 7.5 சதவீதம் அதிகரித்து மொத்த பயன்பாட்டின் அளவு 1,121 டன்னாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் தங்க நுகர்வு 1,041 டன்னாக இருந்தது.


Click it and Unblock the Notifications

