மும்பை: பாரீஸ் தீவிரவாத தாக்குதலில் இருந்து ஐரோப்பிய சந்தை கணிசமான அளவில் உயர்வடைந்துள்ளதால், ஆசிய சந்தையில் இன்று வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியது.
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அமரிக்கப் பெடரல் வங்கியின் முக்கியக் கூட்டத்தில், வட்டி உயர்வு குறித்த முக்கிய முடிவுகள் எட்டுக்க முடிவு செய்யதுள்ள அமெரிக்க அரசுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் மும்பை பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் ஆசிய சந்தையை முழுமையாக இன்று சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.
இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 359 புள்ளிகள் வரை உயர்ந்து 25,841 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 110.95 புள்ளிகள் உயர்ந்து 7842.75 புள்ளிகளை அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.