மும்பை: மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட உள்ள செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி அறிக்கை மற்றும் செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள இருமாத நாணய மறுஆய்வுக் கொள்கையை எதிர்பார்த்து இன்றைய பங்குச்சந்தை லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 17.47 புள்ளிகள் உயர்ந்து சந்தை முடிவடைந்தது.
மேலும் ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தைவான் சந்தைகளில் மந்தமான வர்த்தகம் நிலவியதால் இந்திய சந்தை அதிகளவில் பாதித்தது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17.47புள்ளிகள் உயர்ந்து 26,145.67 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 7.45 புள்ளிகள் சரிந்து 7,935.25 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எல்அண்ட்டி, டிசிஎஸ், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டி, சிப்லா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைந்துள்ளது.