மும்பை: ஐரோப்பிய மத்திய வங்கி தனது பத்திர கொள்முதல் திட்டத்தை வெறும் 6 மாதம் மட்டும் நீட்டித்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஐரோப்பிய சந்தையை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர். இந்தியாவிற்கும் ஐரோப்பிய சந்தைக்கும் அதிகளவிலான பிணைப்பு இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யக் காத்துக்கிடக்கின்றனர். இதனால் பல ஆயிரம் கோடி முதலீடு கிடப்பில் உள்ளது.
இந்திய சந்தையிலும் ஆசிய சந்தையிலும் முதலீடு அதிகளவில் குறைந்ததால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 248.51 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 248.51 புள்ளிகளைச் சரிந்து 25,638.11 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 82.25 புள்ளிகளைச் சரிந்து 7,781.90 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மேலும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு மீதான தாக்கம் இன்னமும் உள்ளதால் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பெடர்ல் ரிசர்வ் வங்கியின் காரணமாகவே தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.