மும்பை: 2015ஆம் ஆண்டின் கடைசி வாரப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால், மும்பை பங்குச்சந்தையில் ப்ளூ சிப் பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்களால் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.
இதனால் காலை வர்த்தகத் துவக்கத்தில் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 195 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வாரத்தில் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 195.42 புள்ளிகள் வரை உயர்ந்து 26,034.13 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 64.10 புள்ளிகள் உயர்வில் 7,925.15 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் அதிகளவிலான சரிவை சந்தித்தது.