மும்பை: சீன நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி, கணிப்புகளை விடவும் மோசமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து, இந்நாட்டின் யுவான் நாணயம் 5 வருடச் சரிவை அடைந்துள்ளது.
அதேபோல் சீன பங்குச்சந்தை குறியீடான ஷங்காய் காம்போசிட், வரலாறு காணாத அளவிற்கு 6.86 சதவீதம் வரை குறைந்து ஆசிய சந்தை முழுவதையும் பதம் பார்க்கத் துவங்கியுள்ளது.
7 சதவீத சரிவை தாங்க முடியாமல் சீன பங்குச்சந்தை வர்த்தகத்தை இன்று முழுமையாக மூடப்பட்டது.
விடுமுறைக்குப் பின்..
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களின் நீண்ட விடுமுறைக்குப் பின் இன்று துவங்கியுள்ள நிலையில் சீன சந்தையின் வீழ்ச்சி சர்வதேச சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது.
ஆசிய சந்தை
சீன சந்தையின் மிகப்பெரிய வீழ்ச்சியின் காரணமாக ஆசிய சந்தையில் ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜப்பான், நிக்கி, தைவான், இந்தியா உட்பட அனைத்துச் சந்தையும் சரிவையைச் சந்தித்துள்ளது.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கும் முதலே தொடர் சரிவைச் சந்திக்கத் துவங்கியது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 537.55 புள்ளிகள் சரிந்து 25,623.35 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 171.90 புள்ளிகள் குறைந்து 7,791.30 புள்ளிகளை எட்டியது.
35,000 வெறும் கனவு தானா??
2016ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை 35,000 புள்ளிகளை எட்டும் எனக் கணிப்புகள் வெளியாகி சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் 430 புள்ளிகள் வரை சரிந்து அதளப் பாதாளத்தை நோக்கிய செல்கிறது மும்பை பங்குச்சந்தை.