மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சீன சந்தைச் சரிவாலும், ஐரோப்பிய சந்தையின் வீழ்ச்சியாலும் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து சரிவு பாதையை நோக்கி பயணம் செய்கிறது.
இந்நிலையில் தொடர் 3 நாள் சரிவில், சென்செக்ஸ் குறியீடு 3 மாத சரிவை எட்டியுள்ளது.
புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்தாலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் இந்திய சந்தை கடுமையாகப் பாதித்தது.
சீன மற்றும் ஆசிய சந்தையில் நிலவு தற்போதைய பதற்றமான நிலையைக் கண்டு ஐரோப்பிய சந்தை தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துள்ளது. அதேபோல் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி தற்போது மோசமான நிலையில் உள்ளதால் இன்று ஐரோப்பிய பங்குச்சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் வட கொரியாவின் ஹைட்ரஜென் குண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்த வெளிப்பாடு சர்வதேச பங்குச்சந்தையிலும் தெரிகிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 174 புள்ளிகள் சரிந்து 25,406.33 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 43.65 புள்ளிகள் சரிவில் 7,741 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.