மும்பை: சீன உற்பத்தி சந்தை, கணிப்புகளுக்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளாதால் ஷாங்காய் பங்குச்சந்தை குறியீடு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று 7 சதவீத சரிவை எட்டி 4 நாட்களில் 2வது முறையாக ஆட்டோமேடிங் ஷட்-டவுன் ஆனது.
இதனால் ஆசிய சந்தை முழுவதும் இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
ரத்தக் களறி
வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் 554.50 புள்ளிகள் சரிந்து 24,851.83 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதனால் சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் அனைத்துச் சரிவை தழுவி ரத்தக் களரி ஆனது.
நிஃப்டி
சென்செக்ஸ் தான் இப்படி என்றால் நிஃப்டி குறியீடு சொல்லவே வேண்டாம், 172.70 புள்ளிகள் குறைந்து 7,568.30 புள்ளிகளை எட்டியுள்ளது.
சீன சந்தையின் வீழ்ச்சியைப் பார்த்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
முதலீடு
பங்குச்சந்தை உயர்வடைவதற்கு ஏதேனும் வாய்ப்புகள் தெரிந்தால் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் தற்போது பாதுகாப்பான முதலீடுகளைத் தேடி சென்றுள்ளனர்.
கச்சா எண்ணெய்
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகச் சரிவை சந்தித்த கச்சா எண்ணெய் விலை இன்று சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகச் சரிவால் மீண்டும் 11 வருடச் சரிவை எட்டியுள்ளது.