மும்பை: சீனா மற்றும் ஆசிய சந்தையின் தாக்கத்தால் 335 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது.
திங்கட்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போது மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின், ப்ளூ சிப் பங்குகள் மீதான அதிக முதலீடு மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் லாபகரமான நிலை ஆகியவை சென்செக்ஸ் குறியீடு 15 புள்ளிகள் உயர்வான வர்த்தகத்தை அடைய வழிவகைச் செய்தது.
இதன் பின் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 109.29 புள்ளிகள் சரிந்து 24,825.04 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 37.50 புள்ளிகள் சரிந்து 7,563.85 புள்ளிகளை அடைந்தது.
சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, என்டிபிசி, ஐடிசி, ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் லாபகரமான நிலையை எட்டிய நிலையில்.
அதேபோல் ஐடி, பார்மா, வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.