மும்பை: வளர்ச்சியில் 25 வருடச் சரிவில் இருக்கும் சீனா சந்தையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
சீன சந்தையின் தாக்கத்தில் இந்திய சந்தையும் பாதிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ள அதிகளவில் ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்தனர்.
3 நாள் சரிவு
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் சில நிமிடங்களில் வர்த்தகமும் முதலீடும் சூடு பிடிக்கத் துவங்கிய நிலையில் 3 நாள் தொடர் சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.
ஐரோப்பிய சந்தை
இந்நிலையில் இன்று ஐரோப்பிய சந்தையின் பணவீக்கத்தின் அளவு 0.2 சதவீதமாகவும், கட்டுமானத்துறை 18 மாத உயர்வை அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.
அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையின் நாணய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் இச்சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் சீரடைந்து தொடர்ந்து உயர்வில் இருந்தது.
சீன சந்தை
உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, 2015ஆம் ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.9 சதவீதமாத பதிவாகியுள்ளது.
சென்செக்ஸ்
இத்தகைய சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 291.47 புள்ளிகள் சரிவில் 24,479.84 புள்ளிகளை அடைந்தது 3 நாள் தொடர் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 84.10 புள்ளிகள் உயர்வில் 7,435.10 புள்ளிகளை எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிறுவனங்களின் நிலை
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, விப்ரோ, கோல் இந்தியா, ஏசியன் பெயின்ஸ், மாருதி, ஐடிசி, லூபின், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
ஆதித்யா பிர்லா நூவோ
இந்நிலையில் ஆதித்யா பிர்லா நூவோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 15,161 பங்குகளைத் தனது ஊழியர்கள் கணக்கிற்கு அளித்தது. இதன் எதிரொலியாக ஆதித்யா பிர்லா நூவோ நிறுவனங்கள் இன்று ஓரே நாளில் 164.65 புள்ளிகள் உயர்ந்து 2,062.00 புள்ளிகளை எட்டியது.