மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சந்தைகள் லாபகரமாக முடிந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகம் ஆசிய சந்தைக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தையில் லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை பட்ஜெட் தாக்கங்களையும் தாண்டி சென்செக்ஸ் வர்த்தகக் குறியீடு சில வர்த்தகச் சரிவுகளுடன் லாபகரமான வர்த்தக நிலையை அடைந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 267.35 புள்ளிகள் உயர்ந்து 23,649.22 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 83.30 புள்ளிகள் உயர்ந்து 7,191.75 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மாருதி, ஏசியன் பெயின்ட்ஸ், பெல், ஆக்சிஸ் பாங்க், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, டாடா ஸ்டீல், கெயில், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய சந்தைகள் லாபத்தில் முடிந்த நிலையில் சீன மட்டும் 0.16% சரிவைச் சந்தித்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய சந்தைகள் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்படும் நிலையில், இங்கிலாந்து மற்றும் சுவிஸ் கணிசமான சரிவை சந்தித்துள்ளது.
மேலும் இன்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.