தட்டுத் தடுமாறி லாபத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சிங்கப்பூர் மற்றும் ஆசிய சந்தைகளின் வர்த்தக நிலவரங்களின் படி வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவுடனே துவங்கப்படும் என முன்கூடியே கணிக்கப்பட்ட நிலையில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று சரிவுடனே துவங்கியது.

 தட்டுத் தடுமாறி லாபத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை..!

வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதாலும், ஆசிய சந்தையில் நிலவிய மந்தமான வர்த்தகக் காரணங்களின் மூலம் இன்றைய வர்த்தகம் மோசமாக இல்லை என்றாலும், குறைவாகவே இருந்தது.

<strong><em>(பட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..!)</em></strong>(பட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..!)

வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையை எட்டிப் பார்த்து மீண்டும் சரிவை தழுவியது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துக்கொண்டனர்.

 தட்டுத் தடுமாறி லாபத்தை எட்டியது மும்பை பங்குச்சந்தை..!

இந்நிலையில் 3 மணியளவில் மத்திய பட்ஜெட் 2016 குறித்து நோமுரா அளித்த சாதகமான தகவல்கள் மூலம் மீண்டும் வர்த்தகம் சூடுப்பிடிக்கத் துவங்கியது. இதனால் இன்றைய வர்த்தகம் லாபத்தில் முடிந்தது.

<strong><em>(பட்ஜெட் 2016: சிகரெட் மீதான வரி 40% வரை உயரலாம்..)</em></strong>(பட்ஜெட் 2016: சிகரெட் மீதான வரி 40% வரை உயரலாம்..)

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59.93 புள்ளிகள் உயர்ந்து 23,709.15 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19 புள்ளிகள் உயர்ந்து 7,210.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 60 points up at 23709

The BSE Sensex and NSE Nifty swung between gains and losses on Friday and finally concluded the session in green on buying in last leg of the trade.
Story first published: Friday, February 19, 2016, 16:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?