ஜிஎஸ்டி அமைப்பின் புதிய தலைவர் அமித் மித்ரா..!
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் புதிய தலைவராக மேற்கு வங்காளத்தில் நிதியமைச்சரான அமித் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அறிவித்துள்ளது.
இக்குழுவைத் தலைமை வகிக்கும் இரண்டாவது மேற்கு வங்காள நிதியமைச்சர் அமித் மித்ரா, இதற்கு முன் அஷ்ஹிம் தாஸ்குப்தா இக்குழுவைத் தலைமை விகித்து வழிநடத்தினார்.

கேரள மாநில நிதியமைச்சர் கே.எம் மணி கடந்த நவம்பர் மாதம் சில ஊழல் குற்றங்கள் செய்தமைக்காகப் பதவி விலகினார், இதன் பிறகே தற்போது அமித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமித் அவர்களுக்கு நிதி மற்றும் நிதியியல் சார்ந்த துறையில் பல வருடங்கள் அனுபவம் உள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் வரி விதிப்பு மற்றும் வசூல் முறையில் பல மாற்றங்களைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் வரி வசூல் அளவு கடந்த ஆண்டில் 100% உயர்வடைந்தது.


Click it and Unblock the Notifications