சரிவில் இருந்து மீண்ட மும்பை பங்குச்சந்தை.. 132 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய சந்தையில் ஏற்றுமதியின் தொடர் சரிவின் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகத்தில் 120 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் மதிய நேர வர்த்தகத்தில் சுகாதாரத் துறை நிறுவனங்களான லூப்பின் மற்றும் சிப்லா நிறுவனப் பங்குகள் திடீரென உயர்ந்தது சந்தைக்குச் சாதகமாக அமைந்தது.

அதேபோல் சர்வதேச சந்தைகளின் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை இந்திய சந்தையில் உயர்ந்துள்ளது, இதன் காரணமாக வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது.

சரிவில் இருந்து மீண்ட மும்பை பங்குச்சந்தை.. 132 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

இதன் எதிரொலியாகச் சரிவில் தத்தளித்த மும்பை பங்குச்சந்தை 131.31 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்படுகிறது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 131.31 புள்ளிகள் உயர்வில் 24,682.48 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் மாலை நேர வர்த்தகத்தில் 38.15 புள்ளிகள் உயர்ந்து 7,498.75 புள்ளிகளை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 131 points higher

Indian stock markets clawed back losses to close higher, led by gains in beaten-down healthcare stocks such as Lupin and as a rise in crude oil prices propped up global markets
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X