மும்பை: 2016ஆம் நிதியாண்டின் பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பார்க்கும்போதும் முதலீட்டாளர்கள் கண்களில் ரத்தக் கண்ணீர் வருவது தான் குறையாக உள்ளது.
2015ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையில், இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 9.36 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
இதனால் சந்தை முதலீட்டாளர்களின் பணம் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் காற்றில் கரைந்துள்ளது.
7 லட்சம் கோடி
2016ஆம் நிதியாண்டில் இந்திய பங்குச்சந்தை தாறுமாறான சரிவுகளைச் சந்தித்ததால் முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணத்தை இழந்துள்ளனர்.
12 மாத காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 9.36 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களைப் பதம் பார்த்துள்ளது.
என்ன காரணம்..?
சந்தையில் நிலவும் தகவல்கள் படி சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சி மற்றும் அன்னிய முதலீடுகளின் வெளியேற்று ஆகியவையே இத்தகை பெரும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகத் தெரிவித்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும்போதும், சீன சந்தை ஷட்டவுன் ஆன போதும் இந்திய கமாடிட்டி சந்தை அதிகளவில் பாதித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தை தத்தம் காலகட்டங்களில் சுமார் 9.36 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்கள்
இதனால் 2016ஆம் நிதியாண்டின் முதலீட்டாளர்கள் ஒரு நாளில் 2,700 கோடி ரூபாய் வீதம் ஒரு வருடத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
ரூபாய் மதிப்பு
மேலும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 3.61 ரூபாய் சரிந்து 66.26 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.
சீறும் மார்ச் மாதம்...
மேலும் 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 10.17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 4 வருடங்களில் இல்லாத உயர்வை இந்த மார்ச் மாதம் பெற்றுள்ளோம். இந்நிலையில் மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் குறியீடு 2,339 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 751.35 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications