மும்பை: ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் தங்களது நலனுக்காக யூனியன் அமைப்பது அவர்களது உரிமை எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் யூனியன் சங்கத்தை அமைக்க ஐடி நிர்வாகமே உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பங்குச்சந்தையில் ஐடி நிறுவனப் பங்குகள் கலகலத்துப் போனது.
டிசிஎஸ்
தமிழ்நாட்டில் 25 சதவீத ஊழியர்களைக் கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் 1.29 சதவீதம் சரிந்து 2,577.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்போசிஸ்
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் இன்று அதிகப்படியாக 4.27 சதவீதம் சரிந்துள்ளது.
ஹெக்ஸாவேர்
இதேபோல் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 40-45 சதவீதம் ஊழியர்களைத் தமிழ்நாட்டு அலுவலகங்களை வைத்துள்ள ஹெக்ஸாவேர் இன்றைய வர்த்தகத்தில் 0.30 சதலவீதம் வரை சரிந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
அதேபோல் னெல்கோ, கேபிஐடி, என்ஐஐடி டெக், டேக், ஆக்சிஸ் கேட்ஸ், 3i இன்போடெக், சுபெக்ஸ், மைன்ட்டிரீ, ரோல்டா, ஆப்டெக், சேனாட்டா சாப்ட்வேர், எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் குறைவாகச் சந்தித்தது.
தப்பித்த சில நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஐடித்துறை வர்த்தகத்தில் சரிவில் இருந்து தப்பித்த சில நிறுவனங்களில் டேட்டாமேட்டிக்ஸ், ஆர்எஸ்எஸ் சாப்ட்வேர், மெப்சிஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான லாபத்தைச் சந்தித்தது.