மும்பை: ஏப்ரல் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தியின் மந்தமான கணிப்புகள் மற்றும் எதிர்வரும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான கூட்டம் ஆகியவை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பதம் பார்த்தது.
இதனுடன் ஐடி நிறுவனங்களில் யூனியன் அமைப்பிற்காகத் தமிழ்நாடு அரசின் பதில் இந்திய சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
இன்றைய வர்த்தகத்தில் துவக்கும் முதலே சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 257.20 புள்ளிகள் சரிந்து 26,763.46 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 69.45 புள்ளிகள் சரிந்து 8,203.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், என்டிபிசி, சிப்லா ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, கெயில், ஆகிய நிறுவனங்கள் லாபத்தைச் சந்தித்தது.