மும்பை: அமெரிக்க ஜாப்ஸ் டேட்டாவை எதிர்நோக்கி இன்று ஆசிய சந்தை சரிவைச் சந்தித்தது. இதனால் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு அதிகளவில் குறைந்து காணப்பட்டது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 100 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 74.59 புள்ளிகள் சரிவில் 27,126.90 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 14.70 புள்ளிகள் சரிந்து 8,323.20 புள்ளிகள் அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஏசியன் பெயின்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், சிப்லா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தது.