மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களின் முக்கியமான டாக்டர் ரெட்டி, போன்ற பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மோசமாக உள்ளதால் சந்தை முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கிய அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 140 புள்ளிகள் வரை சரிந்தது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டாக்டர் ரெட்டி நிறுவனம் சுமார் 76 சதவீத லாப சரிவை சந்தித்தது வெறும் 153.50 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பதிவு செய்துள்ளது. இதன் அறிவிப்பு வெளியிட்ட அடுத்தச் சில நிமிடங்களில் நிலையான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் குறியீடு 140 புள்ளிகள் வரை சரிந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் 300 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை 118 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118.82 புள்ளிகள் சரிந்து 27,976.52 புள்ளிகளை அடைந்துள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 45 புள்ளிகள் சரிந்து 8,590.65 எட்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.