மும்பை: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இருந்தாலும், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பிற வர்த்தகப் பரிவு இக்குழுமத்தின் 35 சதவீத வருவாய் அளிக்கிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் முக்கிய வர்த்தகமாக இருந்த தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ஜூவல்ஸ், மிகப்பெரிய வர்த்தகச் சரிவை அடைந்துள்ளது. இதனால் இப்பிரிவு வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் தலைமையின் கீழ் சுமார் 50 கிளைகள் உள்ளது.
உள்நாட்டு நகை கடைகளுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் ரீடைல் பெயரின் கீழ் மிகப் பெரிய அளவில் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் துவங்கப்பட்டது. இப்புதிய தங்கம் மற்றும் வைர நகை விற்பனை வர்த்தகம் துவங்கிய சில மாதங்களில் கிளைகள் இரட்டிப்பானது. புதிய வர்த்தகத்தின் துவக்கத்தில் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு இருந்தாலும் வருவாய் அளவு குறைவாகவே இருந்தது. ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் மொத்த கட்டுப்பாடும் தற்போது முகேஷ் அம்பனியின் மகள் ஈஷா அம்பானி கையில் வந்த நாள் முதல் அதிக வருவாய் அளிக்கும் வர்த்தகப் பிரிவுகளை மேலும் விரிவாக்கவும், குறைவான வர்த்தகத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான கூடுதல் வேலைகளையும் செய்து வந்தார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு கையில் செலவினத்தைக் குறைக்கும் பணியை முழுமையாக ஏற்று இருந்தார் ஈஷா. இதன் வெளிப்பாடே ரிலையன்ஸ் ஜுவல்ஸ் வர்த்தக வெளியேற்றம். இந்தியாவில் நகை விற்பனையில் பழம் தின்று கொட்டை போட்ட பல கடைகள் வர்த்தக ஸ்தாபனங்கள் உள்ள நிலையில், இவர்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் ரீடைல் சந்தையில் களமிறங்கியது. கிடைத்தது தோல்வி. இந்தியாவில் தொடர் சங்கிலி கடைகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜுவல்ஸ், தற்போது 50 கிளைகள் வரை வைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜுவல்ஸ் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேறத் திட்டமிட்டுள்ள அம்பானி, முதல் கட்டமாக 10 கிளைகளை மூட முடிவு செய்துள்ளது. இதில் மும்மை ஹூக்ஸ் ரோடில் இருக்கும் கிளையும், கொல்கத்தா பார்க் தெருவில் இருக்கும் மற்றொரு கிளையும் அடக்கம். இவை இரண்டும் மிகப்பெரிய வர்த்தகக் கிளையாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2 வருடத்தில் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகை விற்பனை சந்தையில் இருந்து ரிலையன்ஸ் ரீடைல் முழுமையாக வெளியேறப் போகிறது என இத்துறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் வருவாய் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 45.6 சதவீதம் உயர்ந்து 6,666 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கல்யாண் ஜுவல்லர்ஸ், டெல்லி பிசி ஜுவல்லர்ஸ், கொல்கத்தா சென்கோ மற்றும் மும்பை திரிபோவன்தாஸ் பீம்ஜி சவாரி ஆகியோ முக்கிய நகை விற்பனையாளராகப் பார்க்கப்படுகிறது. இதில் சென்கோ மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகியவை தனியார் பங்கு முதலீடு மூலம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகக் கல்யாண் ஜுவல்லர்ஸ் வர்த்தகத்தில் அமெரிக்கத் தனியார் முதலீட்டு நிறுவனமான வார்பர்க் பின்கஸ் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது.ரிலையன்ஸ் ரீடைல்
வெளியேற திட்டம்
போட்டி
10 கடைகள் மூடல்
2 வருடம் தான்
ரூ.6,666 கோடி வருவாய்
முக்கியக் கடைகள்
கல்யாண் ஜுவல்லர்ஸ்
'கல்யான்'ராமன்..!