புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்து நடைப்பெற்ற முக்கிய ஆலோசனையின் எதிரொலியாக மும்பை பங்குசந்தை இன்று ஒரே நாளில் 1.02 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எவ்விதமான சாதமான வாய்ப்புகளும் இல்லாத நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கி அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக காலை வர்த்தகம் துவங்கிய முதல் தொடர்ந்த வர்த்தக சரிவை மும்பை பங்குச்சந்தை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 284.20 புள்ளிகள் சரிந்து 27,697.51 புள்ளிகளை எட்டியது, இதை தொடர்ந்து நிஃப்டி குறியீடு 78.05 புள்ளிகள் சரிந்து 8,544.85 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு மிகவும் மோசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த ஆலோசனை ஒரு சூடுப்பிடித்து வரும் நிலையில், மறுபுறம் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரை அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர உள்ளது.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகம் செய்ய வரும் அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முதலீடு செய்யுங்கள்.