டெல்லி: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா 7 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒரு நாடு -ஒரே வரி என ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியதை அடுத்து 29 மாநிலங்களையும் ஒரே சந்தையாக இந்த மிகப்பெரிய சீர்திருத்தம் நடக்க இருக்கிறது.
வெள்ளி புல்லட்
முதலீட்டாளர்களால் ‘வெள்ளி புல்லட்' என்று அழைக்கப்படும் ஜிஎஸ்டி மசோதா மத்திய மற்றும் மாநில அரசுடன் இணைந்து செயல் படுத்த இன்னும் சில காலம் எடுக்கும்.
2017, ஏப்ரல் 1 முதல்
மத்திய சரசு 2017, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-ஐ செயல்படுத்த உள்ளது. இதனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜிஎஸ்டி-இன் கீழ் எத்தனை சதவீத வரி விதிக்கப்படும் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வரி விகிதத்தை முடிவு செய்ய இன்னும் சில காலம் எடுக்கும்.
அருண் ஜெட்லி
மாநிலங்களவை விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நியாயமான ஒரு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.
திமுக - அதிமுக
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்த மசோதாவை இயற்ற முயன்று பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றாமல் போனது.
18 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விகதம்
ஜிஎஸ்டி வரி விகிதம் 18 சதவீதத்திற்கும் அதிகமா இருக்கக் கூடாது என்றும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய நாங்கள் எதிரி அல்ல என்றும் நாங்கள் பரிந்துறைத்த சில மாற்றங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது அதேபோல 18 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விகதம் விதிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன்
இலவசமாக வருமான வரி தாக்கல்