சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு 300 புள்ளிகள் முதல் 3 சதவீதம் வரை ஃபண்டுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது சேவை வரி மூன்று சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது 18 முதல் 22 சதவீதம் வரை வரி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது 15 சதவீதம் சேவை வரியாகச் செலுத்தி வரும் நிலையில் ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதமாக இருக்கும் நிலையில் 3 சதவீதம் வரை ஃபண்டுகளின் விலை உயர வாய்ப்புள்ளது.
இது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என மூன்று பங்குதாரர்களை பாதிக்கும். முதலீட்டாளர்கள் அதிகமான சேவை வரியாக 15-இல் இருந்து 18 சதவீதம் வரை மேலாண்மை கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும் என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு தலைமை நிர்வாகி சந்தீப் சிக்கா கூறியுள்ளார்.