மும்பை: தொடர்ந்து 2வது நாளாக இன்றும் மும்பை பங்குச்சந்தை சரிந்துள்ளது. புதன்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவை பாதையில் செல்ல துவங்கிய சென்செக்ஸ் 325 புள்ளிகள் வரை சரிந்தது. லூப்பின் நிறுவனத்தின் மோசமான வருவாய் நிலை பங்குச்சந்தை சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
லூப்பின் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், பார்மா துறை நிறுவனங்களின் மீதான முதலீடு அதிகளவில் வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டும் நிலைக்கு வந்ததால் ஆசியா மற்றும் ஜப்பான் சந்தைகள் கணிசமாகப் பாதித்தது.
மேலும் அமெரிக்க உற்பத்தி அறிக்கைக்காகக் காத்துக்கிடக்கும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தருணத்தில் அமெரிக்காவில் உற்பத்தி அளவுகளும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த அதிகரித்து வருகிறது.
இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இன்று இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீட்டைக் குறைந்துள்ளனர்.
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 310.28 புள்ளிகள் குறைந்து 27,774.88 புள்ளிகள் வரை சரிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடும் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் 102.95 புள்ளிகள் சரிந்து 8,575.30 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.