மீண்டும் 28,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளில் லாபத்தில் 31.7 சதவீதம் சரிவைக் கண்டாலும், வராக் கடன் அளவு சந்தை கணிப்புகளை விடக் குறைவாக இருந்ததால் மும்பை பங்குச்சந்தையில் 8 சதவீத உயர்வைச் சந்தித்தது.

 

இதனுடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.

 
மீண்டும் 28,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்..!

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்து 28,000 புள்ளிகளை மீண்டும் எட்டிப்பிடித்தது சென்செக்ஸ்.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 292.80 புள்ளிகள் உயர்ந்து 28,152.40 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டி குறியீடு 80.00 புள்ளிகள் உயர்ந்து 8,672.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets extend gains; Sensex up 300 points

Markets extended gains in late trades with financials leading the gains after SBI reported lower-than-expected rise in bad loans during the June quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X