கோயம்புத்தூர்: இந்தியா பாகிஸ்தான் மத்தியிலான நட்புறவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய மண்ணில் விளையும் பருத்தி மீது ஆர்வம் அதிகம்.
இந்தியாவிடம் இருந்து அதிகளவிலான பருத்தி பொருட்களை வாங்கும் டாப் 10 நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் மொத்த பருத்தி ஏற்றுமதியில் 40 சதவீதம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
25 லட்சம் பேல்
2015-16ஆம் நிதியாண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) காலத்தில் இந்தியா உலக நாடுகளுக்குச் செய்த மொத்த பருத்தி வர்த்தகத்தில் 40 சதவீதம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாத காலத்தில் சுமார் 25 லட்சம் பேல் பருத்தி பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 1பேல் 170 கிலோ.
மொத்த வர்த்தகம்
2015-16ஆம் நிதியாண்டு காலத்தில் 65 லட்சம் பேல் பருத்தி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என இந்திய பருத்தி அமைப்பின் தலைவர் ஜே. துளசிதரன் வர்த்தக அறிக்கையை வெளியிடும் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
உற்பத்தி சரிவு
பாகிஸ்தான் நாட்டில் இக்காலகட்டத்தில் பருத்தி உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதால் அதன் தேவைக்கு இந்தியா ஈடுசெய்துள்ளது என்று இந்திய பருத்தி அமைப்பின் செயலாளர் அத்துல் ஜே அஸ்ஷர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
பாகிஸ்தான்
2015-16ஆம் ஆண்டில் இந்நாட்டில் பருத்தி உற்பத்தி 35 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த உற்பத்தி அளவில் 97 லட்சம் பேல் பருத்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பொதுவாகப் பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேல் பருத்தி தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்யும்.
உற்பத்தியில் இந்தியா டாப்பு
உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா தான் முதல் இடம். 2015-16ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் சுமார் 338 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விலை நிலவரம்
பாகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் போது இந்தியாவில் ஒரு பேல் பருத்தி 34,000 ரூபாய். ஆனால் தற்போது இதன் விலை 50,000 ரூபாய்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பருத்தி விலை 48,000 ரூபாய்.
சீனா
கடந்த நிதியாண்டுகளில் இந்தியாவில் இருந்து அதிகளவில் பருத்து இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications