புது டெல்லி: கிராமப்புறங்களில் இணையதள சேவையை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 462 மில்லியனாக உள்ள இணையதள பயனர்கள் எண்ணிக்கை 2020-இல் இரட்டிப்பாகி 730 மில்லியனாக இருக்கும் என்று அன்மையில் நாஸ்காம் மற்றும் அகமை டெக்னாலஜிஸ் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளனர்.
வளர்ந்து வரும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தகத்தினால் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீனாவில் 721,434,547 இண்டர்நெட் பயனர்களும், இந்தியாவில் 462,124,989 இண்டர்நெட் பயனர்களும், அமெரிக்காவில் 286,942,362 பயனர்களும் இண்டர்நெட் பயன்படுத்துகிறனர்.
இப்போது இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவை கடந்து செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
75 சதவீத இணையதள பயனர்களை இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து பெற இயலும் என்றும், இவர்கள் பெரும்பாலும் உள்ளூர் மொழிகளிலேயே இணையதள தரை பயன்படுத்துவார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இண்டர்நெட்டில் பயன்பாட்டில் இந்தியர்கள் அசத்தல்.. சீனாவுடன் முதல் இடத்திற்குப் போட்டி..!