புது டெல்லி: தங்கம் மீதான தேவை அதிகரித்திருப்பதை அடுத்து ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள் அடுத்த மாதம் விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள்
தங்கம் பத்திரங்கள் மீதான கவர்ச்சியை அதிகரிக்க சில மாற்றங்கள் செய்வதற்கான பணியில் இறங்கி உள்ளதாகவும், ஐந்தாவது முறையாகத் தங்க பத்திரங்கள் செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படும் என்றும் மூத்த மத்திய நிதி அமைச்சக அதிகாரி கூறினார்.
நான்காவது முறை
சென்ற முறை தங்க பத்திரங்கள் மீது சில மாற்றங்களைக் கொண்டு வந்ததாகவும் அது நல்ல சாதகமான முடிவை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த மாதம் வெளியிட்ட தங்க பத்திரங்கள் வாயிலாக ரூ.919 கோடி திரட்டப்பட்டதாகவும் இதுவரை இதுவே அதிகபட்சம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
இரண்டாம் இடம்
அதற்கு முன்பு வரை ரூ.746 கோடி தங்க பத்திரமாகத் திரட்டியதே அதிகமாக இருந்து ஆனால் இது தற்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
துவக்கம்
2015-16 நிதி ஆண்டில் நேரடி தங்கம் வாங்குவதற்கு மாற்றுத் திட்டமாக சவரன் தங்க பத்திரத் திட்டம் துவங்கப்பட்டது.
2.75 சதவீதம் நிலையான வட்டி
ஆரம்ப முதலீடு அளவைப் பொறுத்து வருடத்திற்கு 2.75 சதவீதம் நிலையான வட்டி விகிதத்தில் இந்தப் பத்திரங்கள் மூலம் வட்டி கிடைக்கும்.
இந்த முதலீட்டுப் பத்திரத்தின் முதிர்ச்சி காலத்தின் கடைசி ஆண்டைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளுக்கும், ஆறு மாத்திற்கு ஒருமுறை முதலீடு செய்பவரின் கணக்கில் சேர்க்கப்படும், கடைசி ஆண்டின் வட்டி மட்டும் முதிர்ச்சி காலம் முடியும் போது அசலுடன் சேர்த்து வட்டி தொகையும் திரும்பப் பெறலாம்.
என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ
பத்திரங்கள் டிமேட் மற்றும் பேப்பர் பத்திரங்கள் என இரண்டு விதமாகவும் கிடைக்கும்.
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டிலும் கூடுதலாக முதலீடுகளைப் பெறுவதற்கான தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.