மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் தொடர் ஆய்வுகள் மூலம் தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 546 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்ந்தினால் சர்வதேச சந்தைய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் தனது முதலீட்டை அமெரிக்க கடன் சந்தையில் முதலீடு செய்வார்கள்.
திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கி சில மணிநேரங்களில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் அனைத்து துறைவாரியான வீழ்ச்சிக்கு வழிவகுத்து சென்செக்ஸ் குறியீடு 546 புள்ளிகள் வரை சரிந்தது.
அதுமட்டும் அல்லாமல் இன்று மாலை வெளியாக இருக்கும் ஜூலை மாத தொழிற்துறை உற்பத்தி தரவுகள், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கமும் அதிர்வுகளுக்கு பெடரல் வங்கி அறிவிப்பில் மறைந்து போனது.
இன்று 12மணி அளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 384.53 புள்ளிகள் சரிந்து 28,412.72 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 129.70 புள்ளிகள் சரிந்து 8,737.00 புள்ளிகள் சரிந்துள்ளது.
சர்வதேச சந்தை தாக்கத்தின் மூலம் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்த சரிவு பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் குறியீட்டின் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ், ஆகிய 4 நிறுனங்களை தவிர பிற அனைத்தும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதில் டாடா ஸ்டீல் நிறுவனம் 3.66 சதவீதம் சரிந்துள்ளது.
பிரெக்ஸிட் பிரிவிற்கு பின் இந்திய பங்குச்சந்தை சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications