இந்தியா வருடத்திற்கு 6 கோடி 70 லட்சம் டன் உணவுப் பொருட்களை வீணடிக்கிறது என்று அன்மையில் வெளிவந்துள்ள ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய விவசாய அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிபுணர்கள் இது பற்றி தெரிவிக்கையில் ஆண்டிற்குப் பிரட்டன் உற்பத்தி செய்யும் உணவுகளை விட இந்தியாவில் வீண்படுத்தப்படும் உணவு அதிகம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வருடாந்திர மொத்த உணவு தேவையே 6 கோடி 70 லட்சம் டன் தான் என்றும், இதை வைத்து மொத்த பீகார் மாநிலத்திற்கும் ஓர் ஆண்டிற்கு பற்றாக்குறை இன்று உணவு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி ஆண்டிற்கு 92,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவை நாம் வீணடித்து வருகிறோம். இது 60 கோடி இந்தியர்களுக்கு இந்திய அரசு உணவு மானியமாக அளிப்பதில் மூன்றில் ஒரு பங்குக்கான செலவு என்று கூறியுள்ளது. எரிபொருள் செலவு, உணவுப் பொருட்கள் வீணாவது போன்றவை விவசாயிகளை பெரிதும் பாதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அமைப்பு இந்தியாவில் 40 சதவீதம் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை போன்ற குறைந்த காளத்தில் கெட்டுப் போகாக் கூடியவை அதிகம் என்று தெரிவித்துள்ளது. பூச்சிகள், வாணிலை மாற்றங்கள், நவீன சேமிப்பு கிடங்குகள் இல்லாதது போன்றவே இவ்வளவு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூரப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதிகளவில் வீணடிக்கப்படுவதாகவும், ஆண்டிற்கு 10 லட்சம் டன் வெங்காயமும் 2.2 லட்சம் டன் தக்காளியும் 5 லட்சம் முட்டைகளும் போக்குவரத்தின் போது மட்டுமே வீணடிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமான உணவு வீணாவதை தடுக்க சில தீர்வுகளையும் இந்த அறிக்கையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 1) பண்ணைப் பயிற்சி வழிமுறைகளை அமைத்தல் ஆய்வு அறிக்கை
92,000 கோடி ரூபாய் மதிப்பு
40 சதவீதம் வரை உணவுப் பொருட்ள்
போக்குவரத்தின் போது மட்டும்
தீர்வு என்ன?
2) குளிர்பதன சேமிப்பு முதலீடு
3) விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைப் பண்ணையில் இருந்து சந்தைக்கு எடுத்துச் செல்ல மென்மையான பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்துதல்.
4) உணவு சேமிப்புக் கிடங்குகள் தரத்தை உயர்த்துதல் வேண்டும்.