காஷ்மீர் மாநிலத்தில், யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆத்துமீறி இந்திய எல்லைக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் இந்திய மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கிய தருணத்தில் யூரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது.
இந்திய ராணுவத்துடன் இந்திய விமானப்படையும் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இரவு 12.30 மணிக்கு இந்தியர்களுக்கே உரிய பாணியில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இதுகுறித்த செய்திகள் இன்று இந்திய ராணுவ உயர் அதிகாரி ரன்பீர் சிங் செய்தியாளர்களுக்குத் தெரிவித்த அடுத்த நொடியில் மும்பை பங்குச்சந்தை மளமளவெனச் சரிந்தது.
தகுந்த பதிலடி
பாகிஸ்தான் செய்த பல அட்டூழியங்களுக்குத் தொடர்ந்து பொறுமை காத்து வந்த இந்திய ராணுவம் மற்றும் அரசு, யூரி பகுதியில் நடத்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.
4 மணிநேர தாக்குதல்
இதன் அடிப்படையில் இந்திய ராணுவத்துடன் விமானப்படை கைகோர்த்துப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சுமார் 2.5 கிலோமீட்டர் வரை உள்ளே சென்று சுமார் 4 மணிநேரம் அதிரடியான தாக்குதலை நடத்தியது.
இந்திய விமானப்படை
இத்தாக்குதலில் விமானப்படை முக்கியப்பங்கு ஆற்றியது. 4 மணிநேர தாக்குதலில் விமானத்தின் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதிகளுக்குள் பல இடங்களில் குதித்தனர். இதுமட்டும் அல்லாமல் போர் விமானத்தில் இருந்து குண்டு மழை பொழிந்து தீவிரவாதிகளைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது நமது இந்திய ராணுவம்.
எச்சரிக்கை மணி
இத்தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் மற்றும் அரசு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தகுந்த எச்சரிக்கை மணியாக இருந்தாலும், இது இந்திய பங்குச்சந்தைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
550 புள்ளிகள் சரிவு
பாகிஸ்தான் எல்லையில் நடத்த இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ராணுவ உயர் அதிகாரி ரன்பீர் சிங் அறிவித்த சில நொடிகளில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 550 புள்ளிகள் வரை சரிந்தது. கடகடவெனச் சரிந்தது.
அன்னிய முதலீட்டாளர்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இத்தாக்குதலின் எதிரொலியாக அன்னிய முதலீட்டாளர்கள் இன்று மும்பை பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டை அதிகளவில் வெளியேற்றியதால். பங்குச்சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்கப்பட்டுச் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவடைந்தது.
கச்சா எண்ணெய்
புதன்கிழமை மாலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமைப்பான OPEC தனது உற்பத்தி அளவுகளைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்தச் சர்வதேச பங்குச்சந்தையில் இருந்த பெரும் அளவிலான முதலீடுகள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்யப்பட்டது.
இதனால் 44 டாலராக இருந்த கச்சா எண்ணெய் பேரல் இன்று 68.67 ரூபாய் வரை உயர்ந்தது. கச்சா எண்ணெய் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்ட காரணத்தில் பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு குறைந்தது. இதன் காரணமாக ஆசிய சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.
மந்தமான வர்த்தகம்
ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகத்தில் காரணமாக இந்திய சந்தையில் இன்று காலை 12 மணி வரை மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்தது மும்பை பங்குச்சந்தை.
ரன்பீர் சிங்
இதன் பின் ரன்பீர் சிங் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 550 புள்ளிகள் வரை சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செப்டம்பர் மாத ஆர்டர்கள்
மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் குறியீட்டின் சிரிவு 350 புள்ளிகளாகக் குறைந்த நிலையில், செப்டம்பர் மாத ஆர்டர்களின் முடிவு இன்று சென்செக்ஸ் குறியீட்டை கூடுதலாகப் பாதித்தது.
இந்திய பங்குச்சந்தை
இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகச் சந்தை முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 465.28 புள்ளிகள் சரிந்து 27,827.53 புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 153 புள்ளிகள் சரிந்து 8,591.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
டிசிஎஸ் மட்டும் தப்பியது..
இன்றைய வர்த்தக முடிவில் அதானி போர்ட்ஸ்(5.01% சரிவு), சன் பார்மா ( 3.84% சரிவு), ஐசிஐசிஐ வங்கி (3.76% சரிவு), கெயில் ( 3.19% சரிவு), டாடா ஸ்டீல் (3.15% சரிவு), லூபின் (3.10% சரிவு), பவர் கிரின்ட் (2.64% சரிவு), டாடா மோட்டார்ஸ் (2.53% சரிவு), எஸ்பிஐ ( 2.50% சரிவு) போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
ஆனால் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் 0.46 சதவீத உயர்வுடன் லாபத்தில் திளைத்தது.
தாக்குதல் நடந்த பகுதிகள்
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கேல் மற்றும் லிபா செக்டார்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனப் பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில மக்கள்
இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என் தகவல் கிடைத்துள்ளது.
ஆன்லைன் ஷாப்பி..." data-gal-src="http:///img/600x100/2016/09/shoppingfdsbas-29-1475157801.jpg">