சென்னை: தமிழகத்தில் வங்கிகளுக்கு அக்டோபர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.
வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்றாதல் விடுமுறை. அடுத்து அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
அக்டோபர் 10 திங்கட்கிழமை ஆயூத் பூஜை விடுமுறை, அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறை, அக்டோபர் 12 புதன்கிழமை மொஹரம் விடுமுறை என விடுமுறை நாட்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஏற்படுவத்தால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளன. மேலும் ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: சம்பளத்தை விடுங்க பாஸ்.. உங்க நிறுவனத்தில் இந்த சலுகை எல்லாம் இருக்கா..?