முதலீட்டாளர்களுக்குத் தங்கமும், வெள்ளியும் எந்த வருடமும் இல்லாத அளவுக்குப் பங்கு சந்தைகளை விட இந்த வருடம் 28 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
2016 அக்டோபர் 10 ஆம் தேதி வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 19.77 சதவீதமும், 28.37 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையின் நிலை
இன்னொரு பக்கம் 30 பங்குகளின் விலை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதைப் பார்த்தால் 7.52 சதவீதம் மட்டுமே. 2016 செப்டம்பர் 8 வரை 52 வார உச்சத்தை அடைந்துள்ள சென்செக்ஸ் குறியீடு 29,077.28 புள்ளிகளை அடைந்துள்ளது.
ஆனால் 2015 மார்ச் 4 ஆம் தேதி அடைந்த உச்சபட்ச உயர்வான 30,024.74 புள்ளிகளை விட இது குறைவானது. அதனுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிலை 1,942.4 புள்ளிகள் குறைந்துள்ளன, இது 6.46 சதவீதம் குறைவாகும்.
தங்கம் வெள்ளியின் விலை
2015 டிசம்பர் 31 ஆம் தேதி 25,390 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை 30,410 ரூபாயாக உயர்த்துள்ளது. அதே சமயம் 33,300 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை 42,750 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சந்தையின் நிலவரம்
சந்தையின் நிலவரத்தின் படி பிற சொத்துக்களை விட முதலீட்டாளர்களுக்குத் தங்கம் நல்ல லாபத்தை அளித்ததுடன் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 15 வருடங்களில் 12 வருடங்கள் தங்கம் அதிக லாபம் அளித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2015 மற்றும் 2014
என்ன தான் தங்கமும், பங்குச் சந்தையும் இந்த வருடம் நல்ல லாபம் அளித்து வந்தாலும் சென்ற வருடம் நட்டத்தையே அளித்தது.
முதலீட்டாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளியை விட பங்குச் சந்தை அதிக லாபம் அளித்தது குறிப்பிடத்தக்கது.