அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவாலும், சீன சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தக வீழ்ச்சியாலும் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாகச் சரிந்து வருகிறது.
இன்று காலை 150 புள்ளிகளுடன் சரிவடைந்த சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
தங்கம் விலை
வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரத்து 2,840 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரித்து 3,037 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளது. இன்று வர்த்தக சந்தையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 150 ரூபாய் குறைந்து 42,435.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
நேற்றைய வர்த்தகம்
புதன்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 260 ரூபாய் வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேரபோல் வெள்ளியின் விலை 160 ரூபாய் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை
இந்தியாவில் மிக விமர்சியாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படுவதால் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலக்கட்டத்தில் தங்கத்தின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.