சியோல்: நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடி சமந்தமாக இன்று வெள்ளிக்கிழமை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற இரண்டு காலாண்டுகளில் 3 பில்லியன் டாலருக்கும் மேலாக லாபத்தை இழக்கும் நிலைக்கு சாம்சங் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மூன்றாவது காலாண்டு அறிக்கை இரண்டு தனங்களுக்கு முன்பு வெளியான போது 2.3 பில்லியன் டாலர் லாபத்தை இழந்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முழுவதும் ஸ்க்ராப்
பெரிய அளவிலான கேலக்ஸி நோட் 7 மொபைல் போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடியை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் போனை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தது சாம்சங். மேலும் இதைத் தொடர்ந்து இப்போது தனது பிரீமியம் மாடல் எனக் கூறி வந்ததை முழுவதையும் ஸ்க்ராப் செய்ய இருக்கிறது சாமசங் நிறுவனம்.
விற்பனை சரிவு
நோட் 7 மாடல் போனை சாம்சங் நிறுவனம் முழுவதுமாக நிறுத்த இருப்பதால் அக்டோபர் முதல் மார்ச் மாத இரண்டு காலாண்டுகளுடன் மொத்தமாக மூன்று காலாண்டு மட்டும் இல்லாமல் இந்த விழாக் காலத்திலும் தனது விற்பனையைப் பெறும் அளவில் இழந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டு
நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு லாபத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் இழக்க நேரிடும் என்றும் 2017 முதல் காலாண்டில் 1 டிரில்லியன் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.
பிற மாடல்கள் மீது கவனம்
இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களது நிறுவனத்தின் பிற போன் மாடல்களான கேலக்ஸி எஸ்7, கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற தயாரிப்புகளின் விற்பனையை அதிகர்க்கும் முயற்சியில் இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது
முழுவதுமாக நிறுத்த காரணம்
முதலில் 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 சாதனங்களை திரும்பப் பெற்று மாற்றுச் சாதனங்கள் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் புதிய சாதனங்களும் வெடித்ததைத் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுவதுமாக நிறுத்த சாம்சங் முடிவு செய்துள்ளது.
போன் வெடித்ததற்குக் காரணமாக மொபைல் போன் பேட்டரிகளே என்றும் அதற்குக் காரணம் எந்த நிறுவனம் என்றும் குறிப்பிடவில்லை.
வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில் ஐபோனிற்கு போட்டியாக சாம்சங் மிக வேகமாக ஸ்மார்ட்போன் அறிமுக செய்ய முயற்சி செய்தது மற்றும் சாதனத்தில் உள்ள டெக்னாலஜி கோளாறே இதற்கான காரணம் எனக் கூறுகின்றனர்.
பல மாற்றங்கள்
சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது தயாரிப்புகளில் இன்னும் பல மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
20 பில்லியன் வரை இழப்பு
நோட் 7 படுதோல்வி அடைந்ததை அடுத்து சாம்சங் நிறுவனத்திற்கு 10 பில்லியன் முதல் 20 பில்லியன் வரை லாபத்தில் இழப்பு நேரிடலாம் என்று நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம்பிக்கை
இந்த பெறும் தோல்வியால் மொபைல் போன் துறையில் சாம்சங் நிறுவனம் பெறும் இழப்பைச் சந்தித்துள்ளது மட்டும் இல்லாமல் மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகபும் கடினம் என்று எச்எம்சி இன்வெஸ்ட்மெண்ட் செக்யூரிட்டிஸ் நிறுவன ஆய்வாளர் ஜார்ஜ் ரோச் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications